முகப்பு
தஞ்சாவூர்

பேராவூரணியில் தமுஎகச சார்பில் கலை இலக்கிய கூடல்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்  பேராவூரணி கிளை சார்பில்  8 ஆவது கலை இலக்கியக் கூடல் பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் சனிக்கிழமை மாலை  நடைபெற்றது. 

Updated On : 9 ஜூலை, 2018 at 8:49 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்  பேராவூரணி கிளை சார்பில்  8 ஆவது கலை இலக்கியக் கூடல் பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் சனிக்கிழமை மாலை  நடைபெற்றது. 
நிகழ்ச்சியில் சுரண்டல் என்றால் என்ன? என்ற நூல் வாசிக்கப்பட்டது. கவிஞர்களின் கவியரங்கமும் நடைபெற்றது. 
நிகழ்ச்சியில்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உழவுத் தொழிலின் மேன்மை குறித்து கவி பாடிய பேராவூரணி வடகிழக்கு  ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் காஜா மொய்தீனுக்கு தமுஎகச மாவட்டச் செயலாளர் விஜயகுமார் நினைவுப் பரிசு வழங்கினார் . சங்கத்தின் தலைவர் சமந்தா, செயலாளர் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், பொருளாளர் தா.கலைச்செல்வன்,  ஆர்.எஸ்.வேலுச்சாமி, பேரா.முனைவர் ச.கணேஷ்குமார், ஆசிரியர் வால்கா, எழுத்தாளர் எஸ்.ஜகுபர்அலி உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.