ஆன்மிக ஜோதி அழைப்பு சிறப்பு வழிபாடு
பாபநாசம் வட்டம், அம்மாபேட்டையில் இயங்கி வரும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு
பாபநாசம் வட்டம், அம்மாபேட்டையில் இயங்கி வரும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில், ஆன்மிக ஜோதி அழைப்பு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தஞ்சாவூரிலிருந்து ஊர்வலமாக வந்த ஆன்மிக ஜோதிக்கு அவளிவநல்லூர் சாட்சிநாதசுவாமி கோயிலில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, வழிபாட்டு மன்றத்தின் ஆன்மிக ஜோசிக்கு சிறப்பு வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து, ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தினர் தங்கள் வீடுகளுக்கும் ஆன்மிக ஜோதியை அழைத்துச் சென்று வழிபாடு நடத்தினர்.
ஏற்பாடுகளை மன்றத் தலைவர் டி.விவேகானந்தன்,பொருளாளர் நடராஜன் நிர்வாகிகள் மயில்வாகனன்,சித்ரவேல்,வேணு,மஞ்சுளா,சௌந்தர்யா, கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.