முகப்பு
தஞ்சாவூர்

மயங்கி விழுந்து விவசாயி சாவு

பாபநாசம் அருகே திங்கள்கிழமை மயங்கி விழுந்த விவசாயி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Updated On : 23 ஜனவரி 2019, 7:57 am IST
பகிர்:

பாபநாசம் அருகே திங்கள்கிழமை மயங்கி விழுந்த விவசாயி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அம்மாபேட்டை காவல் சரகம், கன்னித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (75). விவசாயியான இவர் கடந்த திங்கள்கிழமை தனது மாட்டுக் கொட்டகையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தாராம். 
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர்  லோகநாதனை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லோகநாதன் உயிரிழந்தார்.சம்பவம் குறித்த புகாரின்  பேரில் அம்மாபேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.