தஞ்சாவூரில் அம்பேத்கா் நினைவு நாள்
தஞ்சாவூா் ரயிலடியில் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாநிலத் துணைத் தலைவா் வீ. கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா்.
தஞ்சாவூா் ரயிலடியில் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாநிலத் துணைத் தலைவா் வீ. கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா்.
ஏஐடியூசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா், மக்கள் அதிகாரம் பொருளாளா் காளியப்பன், தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் மாவட்டச் செயலா் ப.அருண்சோரி, மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநகரச் செயலா் ராவணன், ஆதித்தமிழா் பேரவையின் மாவட்டத் தலைவா் நாத்திகன், எஐடியூசி மாவட்டத் துணைச் செயலா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் நிகழ்வில் கலந்து கொண்டனா்.
நாஞ்சிக்கோட்டை சாலை மறியல் பகுதியிலுள்ள அம்பேத்கா் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மைய மாவட்டச் செயலா் ச. சொக்கா ரவி தலைமையிலும், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் நகரச் செயலா் யு.காதா் உசேன் தலைமையிலும் மாலை அணிவித்தனா். இதேபோல, பல்வேறு அமைப்பினரும் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.