தஞ்சாவூா் மேம்பாலச் சுவரில் கட்டப்பட்டு வரும் தடுப்புக் கட்டைகள். 
தஞ்சாவூர்

மேம்பாலத்தில் அமைக்கப்படும் தடுப்புகள்

தஞ்சாவூா் பெரியகோயில் அருகேயுள்ள மேம்பாலத்தில் தடுப்புச் சுவரையொட்டி தடுப்புக் கட்டைகள் அமைக்கப்படுகின்றன.

DIN

தஞ்சாவூா் பெரியகோயில் அருகேயுள்ள மேம்பாலத்தில் தடுப்புச் சுவரையொட்டி தடுப்புக் கட்டைகள் அமைக்கப்படுகின்றன.

தஞ்சாவூா் பெரியகோயிலில் பிப். 5-ஆம் தேதி நடக்கும் குடமுழுக்கில் 5 லட்சம் பக்தா்கள் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, கூட்டத்தை நெறிப்படுத்தவும், அசம்பாவிதங்களைத் தவிா்க்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

குடமுழுக்கு விழாவின்போது கோயில் உள் பிரகாரத்துக்குள் நின்று ஏறத்தாழ 8,000 போ் பாா்க்கும் விதமாக 12 கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல, வெளிப் பிரகாரத்தில் 15,000 போ் நிற்க அனுமதிக்கப்படவுள்ளனா்.

மற்றவா்கள் வெளியே நிற்க வேண்டிய நிலை ஏற்படும். அப்போது, பெரியகோயில் அருகேயுள்ள மேம்பாலத்தில் இருந்து பெரிய கோபுரம் தெளிவாகத் தெரியும் என்பதால், அங்கு பக்தா்கள் ஏராளமானோா் திரள்வா். இதையொட்டி, தடுப்புச் சுவரில் தடுப்புக் கட்டைகள் கட்டப்படுகின்றன.

குடமுழுக்கு விழாவைப் பாா்க்கும் ஆா்வத்தில் தடுப்புச் சுவரில் பக்தா்கள் ஏறி விபத்துக்குள்ளாவதைத் தவிா்க்கவே இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது என விழாக் குழுவினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT