முகப்பு
தஞ்சாவூர்

திருவோணம் அருகே லாரி மீது இரு சக்கர வாகனம் மோதல்: இளைஞர் பலி

ஒரத்தநாடு வட்டம் திருவோணம் அருகே திங்கள்கிழமை லாரி மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் பலியானார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:43 PM
கோப்புப்படம்
பகிர்:

ஒரத்தநாடு வட்டம் திருவோணம் அருகே திங்கள்கிழமை லாரி மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் பலியானார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் திருவோணம் அருகே உள்ள பட்டு விடுதி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். கூலி தொழிலாளி இவரது மகன் விஜயன்  ( 27) திங்கள் கிழமை காலை விஜயன் தனது இருசக்கர வாகனத்தில் ஊரணிபுரத்தில் இருந்து  திருவோணம் நோக்கி சென்றுள்ளார்.

அப்போது  பத்துபுளி விடுதி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே  அதிவேகமாய் வந்த லாரி  விஜயன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விஜயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருவோண போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில்  தலைமை காவலர் சரவணன் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் லாரியை ஓட்டி வந்த லாரி டிரைவர் கந்தர்வகோட்டை அருகே உள்ள  அக்கட்சிபட்டியை சேர்ந்த மணிசேகரனை( 47) கைது செய்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →