முகப்பு
தஞ்சாவூர்

பேராவூரணி அருகே பெண் கொலை: கணவர் கைது

பேராவூரணி அருகே பெண் கொலை வழக்கில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 1 ஜூன், 2020 at 8:15 AM
பகிர்:

பேராவூரணி அருகே பெண் கொலை வழக்கில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே குருவிக்கரம்பை யைச் சேர்ந்தவர் உதயராஜன், (35) இவரது மனைவி சசிகலா(33). இருவருக்கும் திருமணமாகி 12 வருடங்களாகி குழந்தை இல்லை. இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். 

திங்கள்கிழமை நள்ளிரவில் இருவருக்குமிடையே தகராறு ஏற்ப்பட்டதால் ஆத்திரமடைந்த உதயராஜன் அரிவாளால் வெட்டியதில் சசிகலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பேராவூரணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து உதயராஜனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.