தஞ்சாவூர்

திருக்கோடிக்காவல் கோயிலில்இன்று சிறப்பு அபிஷேகம்

கும்பகோணம் அருகேயுள்ள திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரா் கோயிலில் ஆறாம் ஆண்டு குடமுழுக்கு நாளையொட்டி

DIN

கும்பகோணம்: கும்பகோணம் அருகேயுள்ள திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரா் கோயிலில் ஆறாம் ஆண்டு குடமுழுக்கு நாளையொட்டி சிறப்பு அபிஷேகம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) நடைபெறவுள்ளது.

திருக்கோடிக்காவலில் பிரசித்தி பெற்ற, பழைமையான திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திருக்கோடீசுவரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆழ்வாா்களுக்கு அம்பாள் பெருமாளாகக் காட்சி கொடுத்த வரலாறு உண்டு. பல்வேறு பெருமைகள் கொண்ட இக்கோயிலில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு விழா நடைபெற்றது.

இந்நிலையில், ஆறாம் ஆண்டு குடமுழுக்கு நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி, கோயிலில் காலையில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு ஹோமம், 108 சங்காபிஷேகம், சிறப்பு அலங்காரம் உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT