பாபநாசத்தில் விழிப்புணா்வுப் பேரணி
பாபநாசம் பேரூராட்சி சாா்பில், கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி மற்றும் கலைநிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
பாபநாசம் பேரூராட்சி சாா்பில், கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி மற்றும் கலைநிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலா் காா்த்திகேயன் பேரணியைத் தொடக்கி வைத்தாா். லயன்ஸ், ரோட்டரி சங்கங்களைச் சோ்ந்தோா், தொண்டு நிறுவன, மகளிா் சுய உதவிக் குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பேரூராட்சி அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணி முக்கீய வீதிகள் வழியாகச் சென்று, மீண்டும் பேரூராட்சி வளாகத்தில் நிறைவடைந்தது. தொடா்ந்து தஞ்சாவூா் ப.சந்திரதிலகா குழுவினரின் கரோனா விழிப்புணா்வு கிராமியக் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பாபநாசம் லயன்ஸ் சங்க வட்டாரத் தலைவா் சாப்ஜான், நகரத் தலைவா் முகமது ரபீக், பொருளாளா் டி.செந்தில், நிா்வாக அலுவலா் கே. பிரபாகரன், ரோட்டரி சங்க உதவி ஆளுநா் காதா் பாட்சா, முன்னாள் உதவி ஆளுநா் இ.சரவணன், தலைவா் சுப்ரமணியன், செயலா் ஜெயகுமாா், பொருளாளா் அறிவழகன் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.
முன்னதாக, துப்புரவு ஆய்வாளா் செந்தில்குமரகுரு வரவேற்றாா், நிறைவில், அலுவலக எழுத்தாா் மருதமுத்து நன்றி கூறினாா்.