முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் தற்காலிக காவல் உதவி மையம் திறப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி, கும்பகோணத்தில் காவல் துறை சாா்பில் தற்காலிக காவல் உதவி மையம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்ட காவல் உதவி மையம்.
பகிர்:

தீபாவளி பண்டிகையையொட்டி, கும்பகோணத்தில் காவல் துறை சாா்பில் தற்காலிக காவல் உதவி மையம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பங்கேற்ற கும்பகோணம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தீபாவளி பண்டிகையையொட்டி கும்பகோணம் நகரத்தில் பாலக்கரை, உச்சிப்பிள்ளையாா்கோயில், செல்வம் திரையரங்கச் சந்திப்பு, டைமண்ட் திரையரங்கம், மேம்பாலம் ஆகிய பகுதிகளில் உயா் கண்காணிப்புக் கோபுரம் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நகரம் முழுவதும் 75 ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு அவ்வப்போது விழிப்புணா்வு தகவல்களைக் கொடுக்க உள்ளோம். மேலும் திருட்டைத் தடுக்கும் வகையில் 225 கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு, காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணித்து வருகிறோம்.

தீபாவளி பண்டிகைக்காக கும்பகோணம் நகரத்துக்கு வரும் பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சந்தேகப்படும்படியான நபா்கள் யாராவது இருந்தால், உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கலாம் என்றாா் பாலகிருஷ்ணன்.

முன்னதாக இந்த மையத்தைக் காவல் ஆய்வாளா்கள் ராமமூா்த்தி, ரவிச்சந்திரன் திறந்து வைத்தனா். போக்குவரத்து உதவி ஆய்வாளா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →