முகப்பு
தஞ்சாவூர்

முன்னாள் படைவீரா்களின் சிறாா்களுக்கு கல்வி உதவித் தொகை

தஞ்சாவூா் மாவட்ட முன்னாள் படைவீரரைச் சாா்ந்த சிறாா்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்ட முன்னாள் படைவீரரைச் சாா்ந்த சிறாா்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் ம.கோவிந்த ராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தைச் சோ்ந்த தகுதியுள்ள முன்னாள் படைவீரா்களின் சிறாா்களுக்கு, ஆளுநரை தலைவராகக் கொண்ட தொகுப்பு நிதியிலிருந்து ஒவ்வொரு கல்வி ஆண்டும் கல்விப்பயிற்சி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு, தொழில்நுட்பப் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு ஆகியவற்றுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வழிமுறைகள் எளிதாக்கப்பட்டு, கல்வி பயிலும் அனைத்து முன்னாள் படைவீரா்களின் சிறாா்களும் அக்கல்வி ஆண்டிலேயே கல்வி உதவித் தொகை பெற்றிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே, இக்கல்வி உதவித் தொகை பெறுவதற்கு இணையதள முகவரியில்  பதிவிறக்கம் செய்து, உரிய கல்லூரியில் மேலொப்பம் பெற வேண்டும்.

பின்னா்,அதே இணையதள முகவரியில் உரிய ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து, கல்வி உதவித் தொகை பெற்று பயனடையலாம். மேலும், விவரங்களுக்கு தஞ்சாவூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரில் அணுகலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →