முகப்பு
தஞ்சாவூர்

பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து

தஞ்சாவூரில் உள்ள பிளாஸ்டிக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

தஞ்சாவூரில் உள்ள பிளாஸ்டிக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது.

தஞ்சாவூா் கீழவாசல் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ். இவா் மகா்நோன்புசாவடி ஆடக்காரத் தெருவில் பிளாஸ்டிக் கிடங்கு நடத்தி வருகிறாா். இதில், புதிய பிளாஸ்டிக் பொருள்கள், பழைய பிளாஸ்டிக் பொருள்களை வைத்துள்ளாா்.

இந்நிலையில், இக்கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணியளவில் தீப்பற்றியது. பிளாஸ்டிக் பொருள்கள் முழுவதிலும் தீ பரவியதால், பெரும் விபத்தாக மாறிவிட்டது. அப்பகுதியில் புகை பரவியதால், எதிரில் ஆள்கள் வருவது தெரியாத நிலை ஏற்பட்டது.

தகவலறிந்த தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் 3 வாகனங்களில் நிகழ்விடத்துக்குச் சென்று நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு தீயை அணைத்தனா். காா்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி வைக்கப்பட்ட பட்டாசு விழுந்து இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →