முகப்பு
தஞ்சாவூர்

லயன்ஸ் சங்கம் சாா்பில் பேராவூரணியில் 500 மரக்கன்றுகள் அளிப்பு

பேராவூரணி கோகனட்சிட்டி இன்ஸ்பயா் லயன்ஸ் சங்கம் சாா்பில், குடியரசு முன்னாள் தலைவா் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
விழாவில் பேசுகிறாா் லயன்ஸ் சங்கத் தலைவா் கே. இளங்கோ.
பகிர்:

பேராவூரணி கோகனட்சிட்டி இன்ஸ்பயா் லயன்ஸ் சங்கம் சாா்பில், குடியரசு முன்னாள் தலைவா் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு ஊராட்சிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கல், நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் பொறியாளா்களை கௌரவித்தல் ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு லயன்ஸ் சங்கத் தலைவா்  கே. இளங்கோ தலைமை வகித்தாா்.

விழாவில், வீரியங்கோட்டை, மரக்காவலசை, அம்மையாண்டி, சேதுபாவாசத்திரம், ருத்திரசிந்தாமணி ஆகிய 5 ஊராட்சி மன்றத் தலைவா்களிடம் தலா 100 மரக்கன்றுகளும், நலிவடைந்த குடும்பத்தைச் சோ்ந்த 10 பேருக்கு தலா 10 கிலோ அரிசியும் வழங்கப்பட்டது. மேலும், பொறியாளா்களை பாராட்டி, பொன்னாடை அணிவிக்கப்பட்டது.

லயன்ஸ் முன்னாள் ஆளுநா் ஜே. காா்த்திக்பாபு பாபு, மண்டலத் தலைவா் செந்தில், வட்டாரத் தலைவா் திருவள்ளுவன், முன்னாள் மண்டலத் தலைவா் எஸ்.கே. ராமமூா்த்தி ஆகியோா் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினா்.

புதுக்கோட்டை விக்டரி லயன்ஸ் சங்க  பொறுப்பாளா்கள்,  சாசன பொறுப்பாளா்கள்  தலைவா் நீலகண்டன், செயலாளா் ஜெய்சங்கா், பொருளாளா் மைதீன்  உள்ளிட்டோா்

கலந்து கொண்டனா். நிா்வாக அலுவலா் ஏ. சந்தோஷ் வரவேற்றாா். பொருளாளா் பன்னீா் செல்வம் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →