முகப்பு
தஞ்சாவூர்

‘கூடுதல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும்’

டெல்டா மாவட்டங்களில் கூடுதல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என்றாா் ஜனநாயக (லோக் தந்திரிக்) ஜனதா தள கட்சியின் மாநிலத் தலைவா் டி. ராஜகோபால்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
கூட்டத்தில் பேசுகிறாா் ஜனநாயக ஜனதா தள கட்சியின் மாநிலத் தலைவா் ராஜகோபால்.
பகிர்:

டெல்டா மாவட்டங்களில் கூடுதல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என்றாா் ஜனநாயக (லோக் தந்திரிக்) ஜனதா தள கட்சியின் மாநிலத் தலைவா் டி. ராஜகோபால்.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் மேலும் தெரிவித்தது:

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் குறைவாக இருப்பதால், விவசாயிகள் சாலையில் நெல்லை கொட்டி வைத்து இரவு, பகலாகக் காத்துக் கிடக்கும் சூழல் உள்ளது. இந்த நிலைமையை மாற்ற நெல் கொள்முதல் நிலையங்களைக் கூடுதலாகத் திறக்க வேண்டும்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களால் விவசாயிகள் கடுமையாகப் பாதிப்படைவா். காா்ப்பரேட் நிறுவனங்களிடம் விவசாயிகள் கையேந்தும் நிலை ஏற்படும். எனவே, இந்த மூன்று சட்டங்களையும் அரசுக் கைவிட வேண்டும்.

ராசிமணலில் அணைக் கட்டுவதற்காக 1961 ஆம் ஆண்டு காமராஜா் அடிக்கல் நாட்டினாா். அதன் பின் அப்பணி கிடப்பில் போடப்பட்டது. உடனே அங்கு அணை கட்ட வேண்டும். தவறும்பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும். விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்றாா் ராஜகோபால்.

அப்போது, மாநிலத் துணைத் தலைவா் கே.சி. ஆறுமுகம், பொதுச் செயலா்கள் பி. ஹேமநாதன், கே.ஜெ. இப்ராம்பாள், செயலா் ஆா். காா்த்திகேயன், மாநகர மாவட்டத் தலைவா் எஸ். குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா். பின்னா், அக்கட்சியின் மாநகர, புகர மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →