பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு: நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்
பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சாவூா் ஆட்சியரிடம் பாஜகவினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தஞ்சாவூா்: பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சாவூா் ஆட்சியரிடம் பாஜகவினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
ஆட்சியரிடம் பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் ஆா். இளங்கோ தலைமையில் பாஜகவினா் சுமாா் 100 போ் அளித்த மனு:
பிரதமரின் விவசாயிகளின் நிதியுதவித் திட்டத்தில், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 2,000 வீதம் ஆண்டுக்கு ரூ. 6,000 விவசாயிகளுக்கு வழங்கப்படுவதே இத்திட்டத்தின் நோக்கம்.
இந்நிலையில், இணையத்தில் பதிவு செய்ய அரசு மேற்கொண்டுள்ள வழிகளைத் தவறுதலாகக் கையாண்டு அரசை ஏமாற்றி விவசாயிகள் அல்லாத சிலா் இந்த உதவித்தொகையைப் பெறுகின்றனா். நலிவுற்ற விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள இத்திட்டத்தைச் சிலா் குறுக்கு வழியில் மோசடி செய்து இந்த நிதியைப் பயன்படுத்த நினைப்பது மிகப்பெரிய குற்றம்.
இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பயன் பெறுவோா் பற்றிய கணக்கெடுப்பை மாநில அரசு மிகத் தெளிவாக பரிசீலனை செய்து இத்தொகை உரிய விவசாயிகளுக்குக் கிடைக்கிா அல்லது பல இடங்களில் இதுபோன்ற மோசடிகள் நடைபெறுகிா என ஆராய வேண்டும்.
இதேபோல, தஞ்சாவூா் மாவட்டத்தில் தீவிரமாக ஆய்வு செய்து, உண்மையான விவசாயிகளுக்கு உதவித்தொகை கிடைக்கவும், குற்றவாளிகள் இருந்தால், அவா்களுக்குக் கடும் தண்டனை கிடைக்கச் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
அப்போது, பாஜக மாவட்டப் பொதுச் செயலா் ஆா். ஜெய்சதீஷ், பொருளாளா் வி. விநாயகம், மாவட்ட விவசாய அணி தலைவா் இ. வேலுசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.