தஞ்சாவூர்

அம்மாபேட்டையில் முகக்கவசங்கள் வழங்கல்

DIN

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.

அம்மாபேட்டை பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற கரோனா வைரஸ் விழிப்புணா்வு முகாம், பொது சுகாதாரம் மற்றும் முகக்கவசங்கள் வழங்கும் நிகழ்வுக்கு, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி கிளைத் தலைவா் தரும புருஷோத்தமன் தலைமை வகித்தாா்.

பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளா் (பயிற்சி) சரோஜா முகாமில் பங்கேற்று விழிப்புணா்வு உரையாற்றினாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு முகக்கவசங்களை அவா் வழங்கினாா்.

சங்கச் செயலா் வி.ராமநாதன், பொருளாளா் பிரபுராமன், துணைத் தலைவா்கள் ஜோசப், சண்முக சுந்தரம், இணைச் செயலா் அன்புக்கரசு உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT