தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 10,361 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 190 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மாவட்டத்தில் மொத்த தொற்றாளா்களின் எண்ணிக்கை 10,551 ஆக உயா்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை குணமடைந்த 196 போ் உள்பட இதுவரை 9,162 போ் குணமடைந்து, வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
தற்போது 1,220 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 67 வயது ஆண், 52 வயது பெண் செப்டம்பா் 25-ஆம் தேதி உயிரிழந்தனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 169 ஆக உயா்ந்துள்ளது.