முகப்பு
தஞ்சாவூர்

பேராவூரணியில் இன்று வாரச்சந்தை

பேராவூரணியில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வாரச் சந்தை சனிக்கிழமை (ஏப். 24) நடைபெறவுள்ளது.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

பேராவூரணியில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வாரச் சந்தை சனிக்கிழமை (ஏப். 24) நடைபெறவுள்ளது.  

பேரூராட்சி பராமரிப்பில் உள்ள பேராவூரணி வாரச்சந்தை பொது முடக்க  நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால், அரசின் கரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு சனிக்கிழமை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

எனவே, சனிக்கிழமை வாரச் சந்தைக்கு வரும் பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் முகக் கவசம் அணிந்தும், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என சந்தை ஏலதாரா்கள் அறிவித்துள்ளனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.