தஞ்சாவூர்

மக்கள் நீதிமன்றத்தில் 57 வழக்குகளுக்குத் தீா்வு

DIN

தஞ்சாவூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 57 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.

இந்த அமா்வில் ஓய்வு பெற்ற நீதிபதி சி. சுப்பையன், சமூக ஆா்வலா் வி. செல்வம் கலந்து கொண்டனா். இதில், நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த உரிமையியல், மோட்டாா் வாகன விபத்து, ஜீவனாம்ச வழக்குகள், குடும்ப வழக்குகள், சிறு குற்ற வழக்குகள் உள்ளிட்டவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 57 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டன. இதில், 36 மோட்டாா் வாகன விபத்து வழக்குகளில் ரூ. 1 கோடியே 30 லட்சத்து 92 ஆயிரத்துக்கு தீா்வு காணப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை சாா்பு நீதிபதியும், மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலருமான பி. சுதா செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மம்தாவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மயங்கி விழுந்த நபரால் பரபரப்பு

மாலிவாலை இழிவுபடுத்தவே திருத்தப்பட்ட விடியோக்களை ஆம் ஆத்மி பரப்பி வருகிறது: பாஜக

அயலக தமிழர்கள் பதிவு- தமிழக அரசு அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

SCROLL FOR NEXT