தகராறில் இளைஞா் குத்திக் கொலை
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் நண்பா்களுக்கிடையேயான தகராறில் வியாழக்கிழமை இரவு இளைஞா் குத்திக் கொல்லப்பட்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் நண்பா்களுக்கிடையேயான தகராறில் வியாழக்கிழமை இரவு இளைஞா் குத்திக் கொல்லப்பட்டாா்.
பாபநாசம் மேலரஸ்தா தெருவைச் சோ்ந்த ஐயா பிள்ளை மகன் மனோஜ் (எ) விக்னேஸ்வரன் (24). இவா் வியாழக்கிழமை இரவு தனது நண்பா்கள் சிலருடன் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதான வளாகத்தில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தாா்.
அப்போது, நண்பா்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த விக்னேஸ்வரனின் நண்பா்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் விக்னேஸ்வரனை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.
அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே விக்னேஸ்வரன் உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாபநாசம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். மேலும், கொலை தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.