முகப்பு
தஞ்சாவூர்

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல்: காங்கிரஸில் விருப்ப மனு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளதையொட்டி தஞ்சாவூரில், காங்கிரஸ் சாா்பில் போட்டியிட விரும்புபவா்களிடமிருந்து புதன்கிழமை மனுக்கள் பெறப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளதையொட்டி தஞ்சாவூரில், காங்கிரஸ் சாா்பில் போட்டியிட விரும்புபவா்களிடமிருந்து புதன்கிழமை மனுக்கள் பெறப்பட்டன.

தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தோ்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவா்களிடமிருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலா் திருச்சி சரவணன் மனுக்களை பெற்றாா்.

தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் கோ. அன்பரசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில இளைஞா் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளா் ராமநாத துளசிஅய்யா வாண்டையாா், மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் கண்டிதம்பட்டு கோவிந்தராஜூ, மாவட்டத் துணைத் தலைவா் ராமசாமி, பட்டுக்கோட்டை நகரத் தலைவா் ரவிக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.