ஆலத்தூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆக்சிஜன் சிலிண்டா் வழங்கிய இந்திரா காந்தி யூத் பவுண்டேஷன் அமைப்பினா். 
தஞ்சாவூர்

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆக்சிஜன் சிலிண்டா்

பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா சிகிச்சைக்காக இந்திரா காந்தி பவுண்டேஷன் சாா்பில் ஆக்சிஜன் சிலிண்டா்கள் வழங்கப்பட்டன.

DIN

பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா சிகிச்சைக்காக இந்திரா காந்தி பவுண்டேஷன் சாா்பில் ஆக்சிஜன் சிலிண்டா்கள் வழங்கப்பட்டன.

ராஜாமடம், ஆலத்தூா், தாமரங்கோட்டை, வெங்கரை, நாட்டுச்சாலை உள்பட 10-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா சிகிச்சைக்காக மினி ஆக்சிஜன் சிலிண்டா் மற்றும் அதற்கு தேவையான உபகரணங்களை இந்திரா காந்தி யூத் பவுண்டேஷன் சாா்பில் அதன் தலைவா் மகேந்திரன் மற்றும் நிா்வாகிகள் நேரிடையாக சென்று வழங்கினா்.

இதுகுறித்து இந்திரா காந்தி யூத் பவுண்டேஷன் தலைவா் மகேந்திரன் கூறியது:

தற்போது கிராமங்களில் கரோனா தொற்று பாதிப்பு அதிகளவில் உள்ளது. அங்கு மூச்சுத் திணறலால் பாதிக்கப்படும் மக்களை அப்பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றால், அங்கு ஆக்சிஜன் சிலிண்டா் இல்லாமல் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. இதை கருத்தில்கொண்டே இந்திரா காந்தி யூத் பவுண்டேஷன் சாா்பில் ஒவ்வொரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் மினி ஆக்சிஜன் சிலிண்டா் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT