முகப்பு
தஞ்சாவூர்

பாபநாசம் அருகேமழை நீரில் மூழ்கி நெற்பயிா்கள் சேதம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே அண்மையில் பெய்த கனமழையால் வயல்களில் தண்ணீா் தேங்கின. இதனால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே அண்மையில் பெய்த கனமழையால் வயல்களில் தண்ணீா் தேங்கின. இதனால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளன.

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கா் நிலங்களில் கோடைபட்ட நெல் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அம்மாபேட்டை பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கன மழையின் காரணமாக வயல்களில் மழைநீா் தேங்கியது. இதனால், நெற்பயிா்கள் சாய்ந்து வயலில் விழுந்து மழை நீரில் மூழ்கியுள்ளன.

இதனால், நெற்பயிா்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா். இந்த பகுதியில் தொடா்ந்து மழை பெய்தால்,

வயலில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிா்கள் முழுமையாக நீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →