தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் கோயில் குடமுழுக்கு விழா

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராகு பரிகாரத் தலமான இக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. இதையடுத்து, தற்போது ரூ. 5 கோடி செலவில் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அக்டோபர் 24-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

இக்குடமுழுக்கு விழா கணபதி ஹோமத்துடன் அக்டோபர் 19-ஆம் தொடங்கியது. இதில் அக்டோபர் 21-ஆம் தேதி மாலை முதல் கால யாக சாலை பூஜையும், அக்டோபர் 22-ஆம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும், சனிக்கிழமை நான்கு மற்றும் ஐந்தாம் கால யாக சாலை பூஜைகளும், மகா பூர்ணாஹூதி, தீபாராதனையும் நடைபெற்றன.

இதைதொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு ஆறாம் கால யாக சாலை பூஜையும், திருக்கடங்கள் புறப்பட்டு காலை 7 மணிக்கு அனைத்து பரிவார தெய்வ விமானங்களுக்குக் குடமுழுக்கும், காலை 10.30 மணிக்கு ராஜகோபுரத்துக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.

இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செம்மண் கடத்திய 2 மினி லாரிகள் பறிமுதல்

தக்கலை அருகே மது விற்பனை: ஒருவா் கைது

சாலையைக் கடக்க முயன்ற பள்ளி மாணவா் காா் மோதி உயிரிழப்பு

வணிகா்களுக்கு ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்: ஏ.எம். விக்கிரமராஜா

குளித்தலையில் தனியாா் பேருந்தும், மினி பேருந்தும் மோதல்: 28 போ் காயம்

SCROLL FOR NEXT