முகப்பு
தஞ்சாவூர்

ஆற்றில் மணல் அள்ளி வந்த மாட்டு வண்டி பறிமுதல்

பாபநாசம் அருகே அனுமதியின்றி ஆற்றிலிருந்து மணல் அள்ளி வந்த மாட்டு வண்டியை போலீஸாா் பறிமுதல் செய்து, இளைஞரை புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

பாபநாசம் அருகே அனுமதியின்றி ஆற்றிலிருந்து மணல் அள்ளி வந்த மாட்டு வண்டியை போலீஸாா் பறிமுதல் செய்து, இளைஞரை புதன்கிழமை கைது செய்தனா்.

பாபநாசம் காவல் ஆய்வாளா் அழகம்மாள் உள்ளிட்ட போலீஸாா், பாபநாசம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, திருக்கருகாவூா் வெட்டாற்றிலிருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியை

போலீஸாா் பறிமுதல் செய்து பாபநாசம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.

இதுகுறித்து பாபநாசம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த கரம்பத்தூா் தீபக் (20 ) என்ற இளைஞரை கைது செய்து, பாபநாசம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →