முகப்பு
தஞ்சாவூர்

புனல்வாசல் கிராமத்தில் ஏப்.24-இல் சிறப்பு மருத்துவ முகாம்

பேராவூரணி வட்டாரம், புனல்வாசலில் ஏப்ரல் 24-ஆம் தேதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

பேராவூரணி வட்டாரம், புனல்வாசலில் ஏப்ரல் 24-ஆம் தேதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலா் வி. செளந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பேராவூரணி வட்டார அளவிலான சுகாதாரத் திருவிழா, வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளியில் ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

நோய் கண்டறிதல், மருந்துகள் வழங்குதல், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்குதல், தாய்-சேய் நலம், தடுப்பூசி சேவைகள், தொற்றா நோய்களுக்கான சேவைகள், பல்வேறு பரிசோதனைகள், யோகா-தியானம் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

எனவே பேராவூரணி வட்டாரத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டை, ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.