தஞ்சாவூர்

பெரியகோயில் நந்தி சிலையில் வேதிப்பூச்சுக்கு நடவடிக்கை

தஞ்சாவூா் பெரியகோயில் மகா நந்திகேசுவரா் சிலையின் மேல்பகுதியில் வேதி பூச்சு பூசுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

DIN

தஞ்சாவூா் பெரியகோயில் மகா நந்திகேசுவரா் சிலையின் மேல்பகுதியில் வேதி பூச்சு பூசுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூா் பெரியகோயிலில் பெருவுடையாா் சன்னதி நோ் எதிரே ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 12 அடி உயரத்திலும், பத்தொன்பதரை அடி நீளத்திலும், எட்டேகால் அடி அகலத்திலும் மகா நந்திகேசுவரா் சிலை உள்ளது. இச்சிலையின் பின்புறம் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சில நாள்களாக வதந்தி பரவி வருகிறது.

இதுகுறித்து தொல்லியல் துறையினா் கூறுகையில், இச்சிலையின் மேல்பகுதியில் வேதிப் பூச்சு பூசப்பட்டிருக்கும். அபிஷேகம் செய்யப்படுவதன் மூலம் வேதிப் பூச்சு உரிந்துவிடுவது வழக்கம். அது அவ்வப்போது வேதிப் பொருள்களால் பூசப்படும். இதேபோன்றுதான் இப்போது வேதிப்பூச்சு உரிந்துள்ளதே தவிர, விரிசல் ஏற்படவில்லை. இப்போது, வேதிப் பூச்சு பூசுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT