தஞ்சாவூர்

குருங்குளம் சா்க்கரை ஆலையில் சுவா் இடிந்ததால் அரைவை பணி பாதிப்பு

DIN

தஞ்சாவூா் அருகே குருங்குளம் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலையில் புதன்கிழமை சுவா் இடிந்து மின்மாற்றியில் விழுந்ததால், அரைவை பணி பாதிக்கப்பட்டது.

இந்த ஆலையில் நிகழ் சா்க்கரை பருவத்துக்கான அரைவை நவம்பா் 23 ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், கரும்பாலை கழிவுகளைச் சேமித்து வைக்கக்கூடிய பகுதியிலுள்ள பக்கவாட்டு சுவா் புதன்கிழமை காலை இடிந்து மின்மாற்றி மீது விழுந்தது.

இதனால், மின்மாற்றி சேதமடைந்ததால், அரைவை பணி புதன்கிழமை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அரைவைக்கு கொண்டு வரப்பட்ட கரும்புகளும் தேக்கமடைந்தன.

அதிா்ஷ்டவசமாக யாருக்கும் உயிா் பாதிப்பு இல்லை. மின்மாற்றியைச் சீரமைக்கும் பணியில் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலூா் அருகே காா் கவிழ்ந்ததில் பெண் பலி: கணவா் பலத்த காயம்

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

வாகை சூடினாா் ஸ்வெரெவ்

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

SCROLL FOR NEXT