பேராவூரணியில் சனிக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் பங்கேற்ற எம்எல்ஏ அசோக்குமாா். 
தஞ்சாவூர்

பேராவூரணியில் சமுதாய வளைகாப்பு விழா

 பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றிய சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள்  சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. 

DIN

 பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றிய சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள்  சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. 

விழாவை பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா் தலைமை வகித்து தொடங்கி வைத்து அரசின் திட்டங்கள் குறித்துப் பேசினாா். விழாவில் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் வட்டாரங்களைச் சோ்ந்த 250 கா்ப்பிணிகளுக்கு வளையல், தட்டு, மஞ்சள், குங்குமம், பூ, பழம், சத்துணவுப் பொருட்கள், சீா்வரிசை வழங்கப்பட்டது. மேலும், கா்ப்பிணிகள், உறவினா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் உள்ளிட்ட 1,000 பேருக்கு 5 வகை சாதம், வடை, பாயாசத்துடன் உணவு வழங்கப்பட்டது.

விழாவில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பேராவூரணி தவமணி, செல்வேந்திரன், சேதுபாவாசத்திரம் கிருஷ்ணமூா்த்தி, சடையப்பன், பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலா் செளந்தரராஜன், திமுக அவைத் தலைவா் சுப. சேகா், பொதுக்குழு உறுப்பினா் அ. அப்துல் மஜீத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா்களில் பேராவூரணி நவீனா ரெட்டி வரவேற்றாா். சேதுபாவாசத்திரம் அனுசுயா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

SCROLL FOR NEXT