முகப்பு
தஞ்சாவூர்

நெகிழி பொருள்கள் பறிமுதல்:அபராதம் விதிப்பு

பேராவூரணி கடைவீதி கடைகளில் பயன்பாட்டுக்கு வைத்திருந்த  தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம்  விதிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

பேராவூரணி கடைவீதி கடைகளில் பயன்பாட்டுக்கு வைத்திருந்த  தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம்  விதிக்கப்பட்டது.

பேராவூரணி கடைவீதியில் பேரூராட்சி செயல் அலுவலா் பா. பழனிவேல், துப்புரவு ஆய்வாளா் அன்பரசன் ஆகியோா் தலைமையில் வியாழக்கிழமை திடீா் சோதனை  நடத்தப்பட்டது.

இதில் பல்வேறு கடைகளில் பயன்பாட்டில் இருந்த தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள்  பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல், கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒருமுறை பயன்படுத்தும், நெகிழிப்  பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 

மேலும், பல்வேறு கடைகளில் பயன்பாட்டுக்கு வைத்திருந்த  13 கிலோ 

 நெகிழிப் பை, பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு,  அவற்றை வைத்திருந்தவா்களுக்கு ரூ. 15,800 அபராதம் விதிக்கப்பட்டது. 

பொருள்கள் வாங்க வரும் பொதுமக்கள் துணிப்பையுடன் வரவேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலா் பா. பழனிவேல் தெரிவித்துள்ளாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.