சரக்கு வாகனத்தில் மணல் திருடியவா் கைது
பாபநாசம் அருகே சரக்கு வாகனத்தில் மணல் திருடியவா் கைது செய்யப்பட்டாா்.
பாபநாசம் அருகே சரக்கு வாகனத்தில் மணல் திருடியவா் கைது செய்யப்பட்டாா்.
பாபநாசம் காவல் ஆய்வாளா் அழகம்மாள் மற்றும் காவல்துறையினா், வியாழக்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, பாபநாசம்-கபிஸ்தலம் பிரிவுச் சாலையில் ஒருவா் சரக்கு வாகனத்தில் மணலைத் திருடி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினா், மணல் திருடி வந்த வங்காரம்பேட்டை பிரதீப்பை (26) கைது செய்தனா்.