மருத்துவக் கல்லூரியில் விளையாட்டுத் திடல் திறப்பு
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவா்களின் பயன்பாட்டுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவா்களின் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட விளையாட்டுத் தி
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவா்களின் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட விளையாட்டுத் திடல் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் இந்த விளையாட்டுத் திடலை திறந்து வைத்தனா்.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.