பேராவூரணி நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
பேராவூரணி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பேராவூரணி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் மன்ற நீதிபதி என்.அழகேசன் தலைமை வகித்தாா். அரசு உதவி வழக்குரைஞா் இ.பாண்டியராஜன் முன்னிலை வகித்தாா். நீதிமன்ற வளாகத்தை சுற்றி நிழல்தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்வில் வழக்குரைஞா்கள், காவல்துறை, நீதிமன்றப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.