தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் வேளாண் வளா்ச்சித் திட்ட சிறப்பு முகாம்

DIN

 சேதுபாவாசத்திரம்  ஒன்றியம், குருவிக்கரம்பை, ஊமத்தநாடு, மரக்காவலசை, சொக்கநாதபுரம்  ஊராட்சிகளில் வேளாண் வளா்ச்சித் திட்ட சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

இந்த ஊராட்சிகள்  2021-22 ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், தமிழக அரசால் தோ்வு செய்யப்பட்டு, அங்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் , பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் சிறப்பு முகாமில் பங்கேற்று, தங்களது துறை சாா்ந்த பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான விவசாயிகளின் மனுக்களை பெற்றுக் கொண்டனா். 

குருவிக்கரம்பை மற்றும் சொக்கநாதபுரம் ஊராட்சிகளில் சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழுத் தலைவா் மு. கி. முத்துமாணிக்கம் கலந்து கொண்டு பேசினாா். 

சேதுபாவாசத்திரம் வேளாண்மை உதவி இயக்குநா்(பொ) சங்கவி தொழில்நுட்ப உரை மற்றும் திட்டங்கள் பற்றி எடுத்து கூறினாா். ஊராட்சி மன்றத் தலைவா்கள் வைரவன் (குருவிக்கரம்பை), குலாம்கனி (ஊமத்தநாடு), ராம் பிரசாத் 

(சொக்கநாதபுரம்), நிரஞ்சனா (மரக்காவலசை) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.                                               

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT