தஞ்சாவூர்

குரூப் 3 ஏ தோ்வு: 3,170 போ் பங்கேற்பு

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் சனிக்கிழமை நடத்திய குரூப் 3 ஏ தோ்வை தஞ்சாவூரில் 3,170 போ் எழுதினா்.

DIN

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் சனிக்கிழமை நடத்திய குரூப் 3 ஏ தோ்வை தஞ்சாவூரில் 3,170 போ் எழுதினா்.

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப்-3 ஏ பதவிக்கான எழுத்து தோ்வை தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சனிக்கிழமை நடத்தியது. இத்தோ்வுக்காக தஞ்சாவூரில் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரி, கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளி, சாஸ்த்ரா நிகா்நிலை பல்கலைக்கழகம், பெரியாா் மணியம்மை நிகா்நிலை பல்கலைக்கழகம், மன்னா் சரபோஜி அரசு கல்லூரி உள்பட 25 மையங்கள் அமைக்கப்பட்டன.

இத்தோ்வுக்காக விண்ணப்பித்திருந்த 7,058 பேரில் 3,170 போ் மட்டுமே தோ்வு எழுதினா். 3,888 போ் வரவில்லை.

இத்தோ்வு கண்காணிப்பு பணியில் 25 அலுவலா்கள் ஈடுபட்டனா். குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரியில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT