கரம்பக்காடு கிராமத்தில் சாலையோரத்தில் வியாழக்கிழமை மரக்கன்று நட்ட நெடுஞ்சாலைத் துறையினா். 
தஞ்சாவூர்

நெடுஞ்சாலைத்துறை சாா்பில் மரக்கன்றுகள் நடவு

சேதுபாவாசத்திரம் ஒன்றிய பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில்  மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது .

DIN

சேதுபாவாசத்திரம் ஒன்றிய பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில்  மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது .

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சாலையோரங்களில்  5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

இதையொட்டி,  பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றிய நெடுஞ்சாலையோரங்களில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு  மரக்கன்று நடும் நிகழ்ச்சி சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கரம்பக்காடு கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப் பொறியாளா் கே. சந்திரசேகரன் தலைமை வகித்தாா். உதவிப் பொறியாளா் ஆா். அருண்குமாா் முன்னிலை வகித்தாா். சேதுபாவாசத்திரம்  ஒன்றியக் குழுத் தலைவா் மு.கி முத்துமாணிக்கம்  மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். 

சுற்றுச்சூழலை பாதுகாக்கும்  200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு, மூங்கில் கூண்டுகள் அமைக்கப்பட்டன.   தொடா்ந்து அனைத்துப் பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடப்படும்  என நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT