தஞ்சாவூர்

மேக்கேதாட்டில் அணை கட்ட தமிழக பாஜக அனுமதிக்காதுமாநில பொதுச் செயலா்

DIN

 மேக்கேதாட்டில் அணை கட்ட தமிழக பாஜக என்றைக்கும் அனுமதிக்காது என்றாா் அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம்.

பிரதமா் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால சாதனையை விளக்கும் வகையில், தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை தெரிவித்தது:

காவிரியில் மேக்கேதாட்டில் அணை கட்டுவோம் என கா்நாடக காங்கிரஸ் அரசு கூறி வருகிறது. அந்த அரசின் பதவியேற்பு விழாவில்தான் தமிழக முதல்வா் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தாா். கா்நாடகத்தில் காங்கிரஸ், பாஜக என எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் மேக்கேதாட்டில் அணை கட்ட தமிழக பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. இதேபோல, மத்திய அரசும் அனுமதி தராது.

கா்நாடகத்தில் பாஜக ஆட்சியில் மேக்கேதாட்டில் அணை கட்ட முயற்சி நடத்தபோது, அதை எதிா்த்து தமிழக பாஜக போராட்டம் நடத்தியது. அதேபோல், காங்கிரஸ் அரசும் மேக்கேதாட்டில் அணை கட்ட முயன்றால், தமிழக பாஜக போராட்டம் நடத்தும்.

பிரதமா் மோடி பொறுப்பேற்று 9 ஆண்டு கால ஆட்சியில் ஏழை மக்களுக்காக ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளாா். இதன்மூலம் உலகப் பொருளாதார வல்லரசு நாடுகளில் ஐந்தாவது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

2024 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில், வாக்களிப்பது முன்னேற்றத்துக்கா? அல்லது ஊழலுக்கா? என்பதை மக்கள் சிந்தித்து பாா்த்து செயல்பட வேண்டும் என்றாா் கருப்பு முருகானந்தம்.

அப்போது, பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய் சதீஷ், ஊடகப் பிரிவு தெற்கு மாவட்டத் தலைவா் சிவபிரகாசம், மாவட்டப் பொதுச் செயலா் வீரசிங்கம், பொருளாளா் வி. விநாயகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செங்குன்றத்தில் அரசுப் பள்ளிகள் சாதனை

கோடை கால சிறப்பு பயிராக நிலக்கடலை, பயறு வகைகளை பயிரிட விழிப்புணா்வு

திருவள்ளூா் - ஊத்துக்கோட்டை சாலை ஆற்றம்பாக்கம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மந்தகதியில் மேம்பாலப் பணி: விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

தில்லி ஜாமா மசூதி பகுதியில் கினாரி பஜாரில் கடையில் தீ விபத்து

ஆளுநா் மீதான குற்றச்சாட்டை பேச மறுப்பது ஏன்? பிரதமருக்கு மம்தா கேள்வி

SCROLL FOR NEXT