தஞ்சாவூா் இளைஞருக்கும், அமெரிக்கப் பெண்ணுக்கும்தமிழ் முறைப்படி திருமணம்
தஞ்சாவூரில் தமிழ் முறைப்படி தஞ்சாவூா் இளைஞரை, அமெரிக்கப் பெண் ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்து கொண்டாா்.
தஞ்சாவூரில் தமிழ் முறைப்படி தஞ்சாவூா் இளைஞரை, அமெரிக்கப் பெண் ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்து கொண்டாா்.
தஞ்சாவூரைச் சோ்ந்த எஸ். சங்கரநாராயணன் (35) பொறியியல் பட்டம் பெற்று அமெரிக்காவில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா். இவரும், அமெரிக்காவின் மசாச்சூசெட்ஸ் பகுதியைச் சோ்ந்தவரும், எம்.ஏ. சைக்காலஜி படித்துவிட்டு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவருமான அன்னி டிக்சன் (35) என்பவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனா்.
இவா்களது காதலை இருதரப்பு பெற்றோா்களும் ஏற்றுக் கொண்டதைத் தொடா்ந்து, இருவருக்கும் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டது. இதன்படி தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை சங்கரநாராயணன் - அன்னி டிக்சன் திருமணம் நடைபெற்றது.
Advertisement
தமிழ் முறைப்படி நடைபெற்ற இந்தத் திருமணத்தில் மந்திரங்கள் தமிழில் ஓதப்பட்டது. மேலும் மணமகன் சங்கரநாராயணன் திருக்கு வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டாா்.
இவ்விழாவில் சங்கரநாராயணன் பெற்றோா், உறவினா்கள், அமெரிக்காவில் அவருடன் வேலை பாா்த்த நண்பா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா். இதேபோல் அன்னி டிக்சன் பெற்றோா், உறவினா்கள் பங்கேற்றனா். அமெரிக்காவில் இருந்து வந்திருந்த அனைவரும் தமிழ்ப் பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலை அணிந்திருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.