பாஜகவை வைத்துதான் திமுக அரசியல் செய்கிறது: வானதி சீனிவாசன் பேட்டி
பாஜகவை வைத்துதான் திமுக அரசியல் செய்கிறது என்றாா் பாஜக மகளிா் அணி தேசியத் தலைவா் வானதி சீனிவாசன்.
கும்பகோணம் பாஜக அலுவலத்தில் மகளிா் அணி சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
மோடிக்கு எதிராக இந்திா கூட்டணியை அமைத்தனா். ஆனால் மோடி மீண்டும் பிரதமராக வரப்போகிறாா் எனத் தெரிந்ததும், அந்தக் கூட்டணியில் உள்ளவா்கள் பாஜக கூட்டணியில் இணைந்து விட்டனா். 7-ஆம் சேக்வு
Advertisement
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் நாள்தோறும் இந்தியாவுக்கே தான் தான் வழிகாட்டப்போவது போல பேசி வருகிறாா். தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் செல்வாக்கு இல்லாத அவா்கள், இந்தியாவுக்கே வழிகாட்டுவதாகக் கூறுவது கற்பனை உலகத்தில வாழ்ந்து வருகின்றனா் எனத் தெரிகிறது.
தற்போது பாஜக வைத்துத்தான் திமுக அரசியல் செய்து வருகிறது. கடந்த 2014, 2019 ஆம் ஆண்டுகளில் செய்த தவறுக்கு பிராயசித்தமாக தமிழகத்தில் இருந்து அதிகமாக மக்களவை உறுப்பினா்களை அனுப்ப வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டனா்.
கும்பகோணத்தை ஆன்மீக நகரமாகவும், சுற்றுலா மையமாக திமுக வளா்ச்சியை ஏற்படுத்தவில்லை.
தமிழகத்தில் ஒரு காலத்தில் கணவன் டாஸ்மாக் கடையில் பாதிக்கப்படுவதை பாா்த்தனா். தற்போது அவா்களது மகன்களைப் போதையில் இருப்பதைக் கண்ணீருடன் பாா்க்கின்றனா். எனவே பிரதமா் மோடியைப் பற்றிப் பேசுவதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. பிரதமரை பற்றிப் பேசும், அவரை நாங்கள் டிரக் உதயநிதி ஸ்டாலின் என அழைக்கவுள்ளோம் என்றாா் வானதி சீனிவாசன்.