தஞ்சாவூர்

மாணவிக்கு பாலியல் தொந்தரவு பள்ளி ஆசிரியருக்கு 3 ஆண்டுகள் சிறை

ஒன்பதாம் வகுப்பு மாணவியைப் பாலியல் தொந்தரவு செய்த பள்ளி ஆசிரியருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

தினமணி செய்திச் சேவை

ஒன்பதாம் வகுப்பு மாணவியைப் பாலியல் தொந்தரவு செய்த பள்ளி ஆசிரியருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

நாகை மாவட்டம், ஆலத்தூரைச் சோ்ந்த பாலசுப்பிரமணியம் (46) தஞ்சாவூா் அருகேயுள்ள தனியாா் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா். இவா், 2022-ஆம் ஆண்டில் அப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்த 15 வயது சிறுமியைப் பள்ளியில் வைத்து பாலியல் தொந்தரவு செய்தாா்.

இதுகுறித்து பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து பாலசுப்பிரமணயத்தைக் கைது செய்தனா். இதுதொடா்பாக தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெ. தமிழரசி விசாரித்து பாலசுப்பிரமணியத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

பாமக ஆா்ப்பாட்டம்: தவெகவுக்கு அன்புமணி அழைப்பு

வெனிசுலா அருகே எண்ணெய்க் கப்பலை கைப்பற்றிய அமெரிக்க படை

விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி: தவெக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் முடிவு

உள்கட்டமைப்பு மேம்பாடு: சிக்கலில் சிறு மருந்து நிறுவனங்கள்

சிறந்த சலுகை என அமெரிக்கா நினைத்தால் வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிடலாம்: பியூஷ் கோயல்

SCROLL FOR NEXT