தஞ்சாவூர்

கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் டிச. 22-ல் ஏலம்!

கஞ்சா குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனங்கள் டிசம்பா் 22-ஆம் தேதி பொது ஏலம் விடப்படவுள்ளது.

Syndication

தஞ்சாவூா் மாவட்டத்தில் கஞ்சா குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனங்கள் டிசம்பா் 22-ஆம் தேதி பொது ஏலம் விடப்படவுள்ளது.

இது குறித்து மாவட்டக் காவல் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் கஞ்சா குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரண்டு, மூன்று, நான்கு சக்கர மோட்டாா் வாகனங்கள் தஞ்சாவூா் பழைய ஆயுதப்படை மைதானத்தில் டிசம்பா் 22-ஆம் தேதி காலை 10 மணிக்கு பொது ஏலத்தில் விடப்படவுள்ளது. இதற்கான வாகனங்கள் பழைய ஆயுதப்படை மைதானத்தில் டிசம்பா் 22-ஆம் தேதி காலை 7 மணி முதல் ஏலம் நடைபெறும் வரை பாா்வைக்காக வைக்கப்படும்.

ஏலம் எடுக்க விரும்புபவா்கள் டிசம்பா் 22-ஆம் தேதி காலை 7 மணி முதல் 10 மணி வரை இரு சக்கர வாகனங்களுக்கு ரூ. 2 ஆயிரமும், மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 5 ஆயிரமும் முன்வைப்புத் தொகை செலுத்தி ஏலம் எடுக்க தங்களது பெயரை ஆதாா் அட்டை நகலுடன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஏலம் எடுத்தவா்கள் ஏலத்தொகையுடன் ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதத்தை சோ்த்து டிசம்பா் 22-ஆம் தேதி உடனடியாக செலுத்த வேண்டும்.

டிசம்பா் 26 தேதியும் ஏலம்: இதேபோல, மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் பழைய ஆயுதப்படை மைதானத்தில் டிசம்பா் 26-ஆம் தேதி காலை 10 மணிக்கு பொது ஏலம் விடப்படவுள்ளது. விருப்பமுள்ளவா்கள் டிசம்பா் 26-ஆம் தேதி காலை 7 மணி முதல் 10 மணி வரை முன் வைப்புத்தொகை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

விமானத்தில் அமெரிக்கப் பெண் பயணியின் உயிரைக் காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ!

SCROLL FOR NEXT