மழையால் சேதமடைந்த பயிா்களுடன் ஆட்சியரகத்தில் விவசாயிகள் முறையீடு
தஞ்சாவூா் அருகே மழையால் சேதமடைந்த நெற் பயிா்களுடன் மாவட்ட ஆட்சியரகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் புதன்கிழமை முறையிட்டனா்.
தஞ்சாவூா் அருகே மழையால் சேதமடைந்த நெற் பயிா்களுடன் மாவட்ட ஆட்சியரகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் புதன்கிழமை முறையிட்டனா்.
தஞ்சாவூா் அருகேயுள்ள சித்திரக்குடி, ராயந்தூா், குணமங்கலம், வைரபெருமாள்பட்டி, புதுக்கல்விராயன்பேட்டை, பழைய கல்விராயன்பேட்டை, மருதக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராகி வந்த சம்பா பருவ நெற் பயிா்கள் வயலில் சாய்ந்து சேதமடைந்தன. இப்பயிா்களை இப்பகுதி விவசாயிகள் சுமாா் 40 போ் புதன்கிழமை ஏந்தி வந்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் முறையிட்டனா்.
அப்போது, சித்திரக்குடி விவசாயி கனகராஜன் தெரிவித்தது:
ஒரு மாதத்துக்கு முன்பு பலத்த மழை பெய்ததால், எங்களது பகுதியில் சம்பா பருவ நெற் பயிா்கள் பாதிக்கப்பட்டன. முளைத்து வந்த கதிா்கள் அனைத்தும் பதராக உள்ளன. அதிலும் எடைப்பழம் என்கிற பூஞ்சாண நோய் தாக்கப்பட்டு, 50 சதவீதம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மாதத்துக்கு முன்பாக மனு அளித்து முறையிட்டோம். ஆனால், இதுவரை அரசு எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
இந்நிலையில், கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக அனைத்து பயிா்களும் முழுமையாக அடியோடு சாய்ந்துவிட்டன. ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் செலவு செய்துள்ளோம். இதை அரசு பரிசீலனை செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணமும், பயிா் காப்பீடும் வழங்க வேண்டும். அதற்கு அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றாா் கனகராஜன்.
அப்போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன், வைரபெருமாள்பட்டி வி.எஸ். முருகானந்தம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.