கும்பகோணம்: மாட்டுப் பொங்கலையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி பாண்டுரங்கன் சம்ஸ்தான் கோயிலில் கோ பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கோ சாலை அமைக்கப்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமான நாட்டு பசு மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மாட்டுப் பொங்கலையொட்டி, இக்கோயிலில் உள்ள பசுக்களுக்கு கோ பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு பசுக்களுக்கு பூஜை செய்து வழிபட்டனா்.