மகளிா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி
தஞ்சாவூா் பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரியில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி சிறப்பு தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரியில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி சிறப்பு தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்தியத் தோ்தல் ஆணையம், மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் அருட்சகோதரி விக்டோரியா தலைமை வகித்தாா். தஞ்சாவூா் கோட்டாட்சியா் ப. நித்யா சிறப்புரையாற்றினாா். தஞ்சாவூா் வட்டாட்சியா் ஜி. சிவக்குமாா் தோ்தல் கட்டுப்பாட்டு அறைகள், ஊடகக் கண்காணிப்பு மையங்கள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தாா்.
நிறைவாக, நூறு சதவீத வாக்குப் பதிவை எட்டும் நோக்கில் கல்லூரி மாணவிகள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டனா்.