திருச்சி

சாலை விபத்தில்  காயமடைந்தவர் சாவு

திருச்சி மாவட்டம் முசிறி அருகே சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்தவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

DIN

திருச்சி மாவட்டம் முசிறி அருகே சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்தவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் எலவமலை கிராமம் பெரியார் நகரைச் சேர்ந்த சரவணசாமி மகன் ராஜன்பெருமாள்கவுண்டர் (26). தனக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தில் திருச்சி நோக்கி உமையாள்புரம் அருகே ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ராஜன்பெருமாள்  கவுண்டர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி  அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் வியாழக்கிழமை
(ஏப். 11) சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தார். இதுகுறித்து முசிறி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT