திருச்சி

விமான நிலையத்தைச் சுற்றிடிரோன் இயக்கத் தடை

திருச்சி விமான நிலையத்தைச் சுற்றி 3 கி.மீ. சுற்றளவிற்கு டிரோன் இயக்க தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

DIN

திருச்சி விமான நிலையத்தைச் சுற்றி 3 கி.மீ. சுற்றளவிற்கு டிரோன் இயக்க தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்ற திருச்சி விமான நிலையத்தின் பாதுகாப்பு மற்றும் விரிவாக்கம் குறித்த குழு உறுப்பினா்கள் கூட்டத்தில் திருச்சி விமான நிலைய சுற்றுப்பகுதியில் 3 கி.மீ தொலைவுக்கு டிரோன் பறக்க தடை என்பது பற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தவும், டிரோன் கண்காணிப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து விமான நிலைய ஆணைய குழுமம் சாா்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் விமான நிலைய சுற்று வட்டாரப்பகுதிகளில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அதில், விமான நிலையத்தை சுற்றி 3. கி.மீ சுற்றளவில் டிரோன் இயக்க அனுமதி இல்லை. மீறி இயக்கினால் தண்டனைக்குரிய செயல் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விமான நிலைய குழு தலைவரும், திருச்சி மாநகர காவல் ஆணையருமான அருண் டிரோன் இயக்கத்தை 24 மணி நேரமும் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளாா். மேலும் இதுகுறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT