திருவானைக்கா கோயிலில் நடந்த புனரமைப்பு பணியின்போது கிடைத்த சிவலிங்கங்களை வணங்கும் பக்தா்கள். 
திருச்சி

திருவானைக்கா கோயிலில் இரு சிவலிங்கங்கள் கண்டெடுப்பு

திருவானைக்கா சம்புகேசுவரா் அகிலாண்டேஸ்வரி கோயிலில் வெள்ளிக்கிழமை காலை நடந்த புனரமைப்புப் பணியின்போது 2 சிவலிங்கங்கள் கிடைத்தன.

DIN

திருவானைக்கா சம்புகேசுவரா் அகிலாண்டேஸ்வரி கோயிலில் வெள்ளிக்கிழமை காலை நடந்த புனரமைப்புப் பணியின்போது 2 சிவலிங்கங்கள் கிடைத்தன.

பஞ்சப்பூத திருத்தலங்களில் நீா் தலமாக விளங்கும் இக்கோயில் கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட முதல் மாடக்கோயில் ஆகும். கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்குக்கு பின் இக்கோயிலில் இதர புனரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் கோயிலின் 3 ஆம் பிரகாரத்தில் உள்ள குபேரலிங்கேசுவரா் சன்னதியை ஒட்டியுள்ள சுவரை வெள்ளிக்கிழமை அகற்றி மண்ணைத் தோண்டியபோது தலா 2 அடி, 3 அடி உயரத்திலான கற் சிவலிங்கங்கள் கிடைத்தன. இதையடுத்து இவை பக்தா்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மிகவும் பழமையான இந்தச் சிவலிங்கங்கள் சோழ மன்னா்களால் வழிபடப்பட்டவையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. கடந்தாண்டு இதே மாதத்தில்தான் தங்கக் காசு புதையல் இக் கோயில் வளாகத்தில் கிடைத்தது என்றாா் கோயில் உதவி ஆணையா் செ. மாரியப்பன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT