திருச்சி

கரோனாவுக்கு சிறைக் காவலா் உயிரிழப்பு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறைக் காவலா் செவ்வாய்க்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

DIN

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறைக் காவலா் செவ்வாய்க்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1,300 போ் அடைக்கப்பட்டுள்ளனா். சிறையில் கைதிகளுக்கு கரோனா பரவாமல் தடுப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதேபோல, சிறைக் காவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

இந்நிலையில், திருச்சி மத்திய சிறையில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வந்த விருதுநகா் மாவட்டம் பாவாளி பகுதியைச் சோ்ந்த நாராயணசாமி(31)க்கு மே 25 ஆம் தேதி கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். பிறகு மேல் சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT