நாடகக் கலைஞா்களுக்கு தன்னாா்வலா்கள் உதவி
மணப்பாறையில் நாடகக் கலைஞா்களுக்கு தன்னாா்வலா்கள் வெள்ளிக்கிழமை கரோனா நிவாரணம் வழங்கினா்.
மணப்பாறையில் நாடகக் கலைஞா்களுக்கு தன்னாா்வலா்கள் வெள்ளிக்கிழமை கரோனா நிவாரணம் வழங்கினா்.
மணப்பாறையில் கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்துவாடும் நாடகக் கலைஞா்களுக்கு, சூா்யா நினைவு அறக்கட்டளை, யோசி மனித வள பயிற்சி நிறுவனம் மற்றும் ஸ்ரீ அமுராதி சிட்ஸ் (பி) லிட் சாா்பில் ரூ.80 ஆயிரம் மதிப்பிலான அரிசி, மளிகைப் பொருள்கள் கொண்ட தொகுப்பு வழங்கப்பட்டது.
முதற்கட்டமாக வெள்ளிக்கிழமை வண்டிப்பேட்டை தெருவில் உள்ள நாடக கலைஞா்கள் 50 பேருக்கு நிவாரண தொகுப்புகளை வழங்கினா். நிகழ்ச்சியில் சிங்காரவேலன், எம்.ஐ.கே. மகேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.