திருச்சி

மணப்பாறையில் ஒரே வீட்டில் 5 பேருக்கு கரோனா தொற்று

DIN

மணப்பாறையில் ஒரே வீட்டில் 5 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அந்த குடியிருப்பு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கரோனா தொற்றின் 2-வது அலையில் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் நாளுக்கு நாள் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றது. இன்று ஒரே நாளில் மணப்பாறை வட்டத்தில் 35, வையம்பட்டி 6, மருங்காபுரி 10 என 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாதிரி முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதில் நகராட்சிக்குட்பட்ட ராஜீவ்நகர் 6-வது குறுக்கு சாலையில் உள்ள ஒரே வீட்டில் 5 பேருக்கு தொற்று ஏற்பட்டதையடுத்து நகராட்சி நிர்வாகத்தால் அந்த குடியிருப்பு பகுதியில் தகர பலகைகள் கொண்டு அடைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அடைக்கப்பட்டது. 

பொதுமக்கள் பாதுகாப்பாகவும், முகக்கவசம் அணிந்தும், கைகளை அவ்வப்போது சோப்புப்போட்டு சுத்தம் செய்தும், அரசின் விதிகளை கைபிடித்தும் இருக்க நகராட்சி தரப்பில் பொதுமக்களுக்கு அறிவித்தப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT